நோயாளிகள் அச்சம்

Update: 2022-08-12 12:19 GMT
கரூர் மாவட்டம், நச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட புறநோயாளிகள், கர்ப்பிணிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை அச்சுறுத்தும் வகையில் மருத்துவமனைக்கு அருகில் காய்ந்து பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. பலத்த காற்று அடிக்கும்போது இந்த மரம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், நோயாளிகள் நடமாட்டத்தின் போது விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்