பயன்படுத்த முடியாத படித்துறை

Update: 2022-08-12 12:18 GMT
கூத்தாநல்லூர் அருகே, வேளுக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானா பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவில் அருகில், வெள்ளையாற்றில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டது. தற்போது இந்த படித்துறையில் படிக்கட்டுகள், கைப்பிடிச்சுவர் சேதமடைந்துள்ளது. மேலும் படித்துறையை சுற்றிலும் செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த படித்துறையை பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து படித்துறையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்