உப்பு ஓடையில் தூண் பாலம் கட்டப்படுமா?

Update: 2022-08-11 14:11 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், மணக்குடையான் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து கடலூர் மாவட்டம், பென்னாடம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் தாமரைப்பூண்டிக்கும், மதுராநகருக்கும் இடையே உள்ள உப்பு ஓடையை கடந்துதான் செல்ல வேண்டும். மழை பெய்யும்போது இந்த ஓடையை பொதுமக்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ஓடையில் தூண் பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்