மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-08-11 14:04 GMT
அரியலூர் மாவட்டம், செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரவு நேரத்தில் மருப்பிரியர்கள் அமர்ந்து மது குடித்து மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். மேலும் ஒரு சிலர் மது பாட்டில்களை உடைத்து அட்டகாசம் செய்து செல்வதினால் மாணவ-மாணவிகளின் கால்களில் அவை குத்தி காயத்தை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்