கூடலூர் மார்தோமா நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது பெய்யும் தொடர் கன மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.