அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-11 13:32 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட அரிஜன காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும் இப்பகுதியில் பெயர் பலகை வைக்காமல் உள்ளதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் விலாசம் தெரியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்