பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு ஆழம் அதிகமானதால் அரசால் மூடப்பட்ட தனியார் கல்குவாரியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 300 அடி ஆழமான இந்த கல்குவாரியில் தண்ணீர் அருந்த வரும் கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழந்து விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.