மண் மூடிய கால்வாய்

Update: 2022-08-11 13:09 GMT

கோவை மாநகராட்சி 84-வது வார்டு ஜி.எம். நகரில் சாக்கடை கால்வாய் மண் மூடி காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே மண் மூடி கிடக்கும் சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்