ஆமூரான் வாய்க்காலை தூர்வாருவது அவசியம்

Update: 2022-08-11 12:02 GMT
திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து ராகவன் வாய்க்கால் பிரிந்து டி.புதுப்பாளையம், திருவெண்ணெய்நல்லூர், கருவேப்பிலைபாளையம், பெரியப்பட்டு வழியாக கெடிலம் நதிக்கரையில் கலக்கின்றது. அதன் பிறகு சித்தலிங்கமடத்திலிருந்து ஆமூர் வரை செல்லும் ஆமூரான் கிளை வாய்க்கால் தூர்ந்து போயும் ஆக்கிரமிப்பிலும் சிக்கி உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ராகவன் வாய்க்கால் வழியாக இப்பகுதியில் உள்ள 8 ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பகளை அகற்றியும், தூர்வாரிடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்