தெருநாய்கள் தொல்லை

Update: 2022-08-11 11:16 GMT

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பேரூராட்சி, கடைவீதி பஸ் நிறுத்தத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் சண்டைபோட்டு கொள்வதால் பொதுமக்கள், பள்ளி சிறுவர்கள் பஸ் நிறுத்தத்திற்கு அச்சத்துடன் வருகிறார்கள். மேலும் இரவில் அதிக சத்தத்துடன் சண்டைபோடுவதால் தூங்ககூட முடியவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.

மேலும் செய்திகள்