அடிக்கடி பழுதாகும் ஏ.டி.எம். எந்திரம்

Update: 2022-08-10 15:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கம் கிராமத்தில் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை 15 -க்கும் மேற்பட்ட ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுதாவதால் இங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பணம் எடுக்க பல கிலோ மீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏ.டி.எம். எந்திரம் அடிக்கடி பழுதாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்