சுகாதார வளாகம் தேவை

Update: 2022-08-10 14:52 GMT

பெரம்பலூர் தாலுகா அலுவலகம் அருகே ஆத்தூர் சாலையில் புதிதாக நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆத்தூர், வீரகனூர், கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், கைகளத்தூர், வெண்பாவூர், நெய்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள் அலுவல் வேலை, கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக அதிக எண்ணிக்கையில் பஸ்களில் வந்து ஆத்தூர் சாலையில் உள்ள புதிய நிழற்குடை பகுதியில் இறங்கி செல்கின்றனர். மேலும் சிலர் பஸ்சுக்காக இந்த நிழற்குடையில் காத்தும் கிடக்கின்றனர். இந்தநிலையில் பயணிகள் அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க இப்பகுதியில் சுகாதார வளாகம் ஏதுமில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடை பகுதியில் சுகாதார வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்