மது பிரியர்கள் தொல்லை

Update: 2022-08-10 13:44 GMT

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் இருந்து ஆழியாறு செல்லும் சாலையில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மதுபிரியர்கள் அருகில் உள்ள வாய்க்கால் மேட்டில் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறியதும் சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்கின்றனர். இதனால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே வாய்க்கால் மேட்டில் அமர்ந்து தொல்லை கொடுக்கும் மதுப்பிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்