கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் பகுதியில் சாலையோரம் ஆபத்தான மரம் சாய்ந்த நிலையில் நிற்கிறது. இது எந்த நேரத்திலும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் மரத்தை வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.