மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தென்கரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி எதிரே சிலர் மது அருந்தி விட்டு அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.