கற்களால் விபத்து அபாயம்

Update: 2022-08-10 12:53 GMT
மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் இருந்து திருக்கனூர் வழியாக கல்குவாரியில் இருந்து தினந்தோறும் 200 -க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் மற்றும் கற்கள் ஏற்றி செல்லப்படுகின்றன. அவ்வாறு செல்லும் போது லாரிகளில் இருந்து மண் மற்றும் கற்கள் சாலையில் கொட்டுகின்றன. இதனால் சாலையில் ஆங்காங்கே கற்கள் சிதறி கிடக்கின்றன. இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனா். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்