சாத்தான்குளம் அமிர்தகிரிநகர் அலங்காரபுரம் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையில், குடிநீர் குழாய் பணிக்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் முடிந்து இன்று வரை பள்ளம் மூடப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?