ஏரல் தாலுகா குறிப்பன்குளம் பஞ்சாயத்து குறிப்பன்குளம் காலனி பஸ்நிறுத்தம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் மழை, வெயில் காலங்களில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.