போனஸ் தொகை வழங்கப்படுமா?

Update: 2022-08-09 12:55 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தில் செயல்படும் இரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், சுமார் 300 விவசாயிகள் தினந்தோறும் 5,500 லிட்டர் பால் ஊற்றி வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய போனஸ் தொகையை கடந்த 11 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கத்திலிருந்து வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பால் வள கூட்டுறவு துறை அதிகாரிகள் போனஸ் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்