குழந்தைகள் அவதி

Update: 2022-08-08 13:48 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கே.பாகைகுளம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்களாகியும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. இந்த மையம் தற்போது ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. ஓட்டு கட்டிடம் என்பதால் வெயிலுக்கும், மழைக்கும் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்