சிவகங்கை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்தி வருகிறது. மேலும் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு,சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.