மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்ளை விரட்டி செல்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளையும் வேட்டையாடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?