மாணவிகளுக்கு பாதுகாப்பு தேவை

Update: 2022-08-07 13:33 GMT
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் உள்ள பள்ளிகளின் அருகே காலை, மாலை நேரத்தில் இளைஞர்களில் சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பந்தாவாக வலம் வரும் இளைஞர்கள் மாணவிகளை கேலி கிண்டல் செய்கின்றனர். இதனால் அதற்கு பயந்து போய் மாணவிகள் அடுத்த நாள் பள்ளிக்கு வர பயப்படுகின்றனர். மேலும் அந்த இளைஞர்களால் மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை தாக்குதல் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பள்ளி அருகே சுற்றித்திரியும் இளைஞர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்