பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமம் ஆண்டியான் குட்டை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறு கீழ் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்பவர்களையும் நாய்கள் கடிக்க வருவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.