சாத்தான்குளம் பேரூராட்சி 14-வது வார்டு தச்சமொழி மீன்கடை தெருவில் உள்ள பொது சுகாதார வளாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காலி இடத்தில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. எனவே சுகாதார வளாகத்தை பராமரித்து உடனடியாக திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.