சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-06 16:33 GMT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆர்.எம்.எஸ்.காலனி, பால்பண்ணை, இ.பி.காலனி, கருணாவதிநகர் ஆகிய இடங்களில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில்  அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்துக்கொள்கின்றனர். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி  விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், கூட்டமாக சுற்றித்திரியும் மாடுகள் சாலையில் நடந்து செல்பவர்களை அவ்வபோது முட்டிவிடுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்