நாய்கள் தொல்லை

Update: 2022-08-06 13:41 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள சாலைகளில் நாய்கள் அதிகளவில் சற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை  விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை துரத்தில் செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நன்னிலம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்