ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சி செயல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தபால் அலுவலகம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் அலுவலர்கள், பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்துசெல்கின்றனர். கட்டிடத்தின் சுவற்றில் கீறல்கள் ஏற்பட்டு, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.