சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்மாய்கரை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் நெடுதூரம் சென்று கழிப்பறையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பஸ் நிலையத்தில் கழிப்பறை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.