புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-05 13:28 GMT

தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் எதிரில் எட்டயபுரம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் மூன்று முக்கு சந்திப்பு உள்ளது. அந்த இ்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை பலகை இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாசகர் வேணுராமலிங்கம் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்