மதுரை கே.புதூர் சம்பக்குளத்தில் கால்நடை ஆஸ்பத்திரி சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது சிறிய அறையில் ஆஸ்பத்திரி வளாகம் செயல்பட்டு வருகிறது.. இடப்பற்றாக்குறை காரணமாக நீண்ட நேரம் கால்நடைகளுடன் காத்திருந்து மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய ஆஸ்பத்திரி கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.