பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபாதை அருகே கிணற்றை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளின் ஓரங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுகள் இடியும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.