விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் மண்டல அலுவலகத்தின் ஒரு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் சேதம் ஏற்பட்டு எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சஉணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த இந்த கட்டிடத்தை அகற்ற தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும்.