கரூரில் உள்ள சர்ச் கார்னர் பகுதியில் இருந்து வெங்கமேடு, வெண்ணைமலை, மண்மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு மேம்பாலம் வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் இந்த மேம்பாலம் அருகே வடிகால் அமைக்கும் பணிக்காக சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணியினை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.