திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் பொதுமக்கள்

Update: 2022-08-03 12:20 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி கோவில் சீயாத்தமங்கை பகுதியில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதிமக்களின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தினை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த சுகாதார வளாகம் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இதனால் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமா?

மேலும் செய்திகள்