திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் உள்ள பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளின் நடுவே ஆங்காங்கே ஆடு,மாடு,குதிரை போன்ற கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.