திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் உள்ள இலவச பொது சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மற்ற சுகாதார வளாகத்தில் காசு கொடுத்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, மூடப்பட்டு கிடக்கும் ெபாது சுகாதார வளாகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.