பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, ஆதனூர் கிராமத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதிகளில் இரவு நேரத்தில் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.