பயனற்ற சேவை மைய கட்டிடம்

Update: 2022-08-02 12:46 GMT

 கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் ஊராட்சி, தவுட்டுப்பாளையத்தில் இருந்து நஞ்சைபுகழூர் செல்லும் தார்சாலையில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளிக்கு எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சேவை மைய கட்டிடம் திறப்பு விழா நடத்தப்பட்ட பிறகும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பூட்டப்பட்டுள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்