தெருநாய்களால் ரெயில் பயணிகள் அச்சம்

Update: 2022-08-01 15:10 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில் நிலையத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில் பயணிகளை கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்