மதுரை மாவட்டம் தெற்கு மாரட்வீதி சாலையோரம் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த சாலையில் செல்வதால் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்தப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.