சமுதாய கூடம் அமைக்கப்படுமா?

Update: 2022-07-31 13:56 GMT

 அரியலூர் மாவட்டம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் வீடுகளில் சுபநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றால் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை நாடவேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு பணச்செலவு அதிக அளவு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் சமுதாய கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்