குரங்குகள் தொல்லை

Update: 2022-07-31 13:25 GMT

 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணணூர், அய்யம்பாளையம் கிராமத்தில் குரங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இவை இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசம் செய்வதுடன், அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், காய்கறிகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை எடுத்துச்சென்று விடுகின்றன. அவற்றை விரட்ட முயன்றால் குரங்குகள் கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்