படிக்கட்டுகள் கட்டித்தர கோரிக்கை

Update: 2022-07-31 11:52 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புங்கோடை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்குள்ள புகளூர் வாய்க்காலில் குளித்தும் தாங்கள் கொண்டு வந்த அழுக்குத்துணிகளை துவைத்தும் செல்கின்றனர். அதேபோல் சலவை தொழிலாளர்கள் அவர்கள் கொண்டுவந்த அழுக்குத் துணிகளை இங்கு துவைத்து காயவைத்து கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் புகழூர் வாய்க்காலில் படிக்கட்டுகள் இல்லாததால் வாய்க்காலுக்குள் இறங்கும்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே புகழூர் வாய்க்காலில் படிக்கட்டுகள் அமைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்