நாய்கள் தொல்லை

Update: 2022-07-31 11:08 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் சிறுமிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. அதுமட்டுமின்றி வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்