விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலை ராபதியேந்தல் விலக்கு அருகே உள்ள தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் ஒருவித அச்ச உணர்வுடனே சாலையில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தரைப்பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.