பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் கீழபெரம்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பொன்விழா கண்டுள்ளது. ஆனால் இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரேஒரு கழிவறை மட்டுமே உள்ளது. பள்ளி வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. மழைக் காலத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால், அந்த நாட்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.