குளத்தை ஆக்கிரமித்த சம்புகள்

Update: 2022-07-30 13:45 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூர் தார் சாலை அருகே குளம் வெட்டப்பட்டு உள்ளது. இந்த குளத்திற்கு ஓலப்பாளையம், கவுண்டன்புதூர் பகுதியில் இருந்து வரும் உபரிநீர் இந்த குளத்திற்கு வருகிறது. குளம் நிரம்பி அருகாமையில் உள்ள புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் குளத்தில் ஏராளமான சம்புகள் ஆள் உயரம் முளைத்துள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் வழியாக வரும் உபரிநீர் இந்த குளத்திற்கு செல்ல முடியாமல் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. எனவே உள்ளாட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்தில் முளைத்துள்ள சம்புகளை அகற்றி சீரமைத்து உபரிநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்