சிதிலமடைந்த நுழைவு வாயில்

Update: 2022-07-30 12:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் இருக்கும் ஆர்ச் பகுதியின் ஒரு பகுதி சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு வித அச்ச உணர்வோடு இந்த பகுதியை கடந்து வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த ஆர்ச் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்