பெரம்பலூர் நகரின் மையப்பகுதியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள தங்களது வயலுக்கு விவசாயிகள் நடந்து செல்லும், வண்டி மாடுகள் செல்லும் ஏரிக்கரை பாதை முட்புதர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இதனால் வயல்வெளிக்கு செல்லும் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவருவதற்கு சிரமப்படுகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர், விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.